திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் அதாவது, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. 3-வது கட்டமாக இப்போது பெய்யத்தொடங்கி உள்ள மழை, நேற்றில் இருந்து வேகமெடுத்துள்ளது. இந்த மழையின் தாக்கம் 26, 27, 28, 29, 30-ம் தேதி ஆகிய ஐந்து நாட்கள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மழையின் தாக்கம் குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம், ''தென் தமிழகத்தில் மிக கனமழை, கன மழைபெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மிதமான மழை உண்டு.
தற்போது உருவாகி உள்ள மூன்றாவது காற்றழுத்த தாழ்வுப்பகுதி இலங்கையின் கிழக்கே இருக்கிறது. அது படிப்படியாக நகர்ந்து அரபிக்கடலுக்குள் சென்றுவிடும். எனவே, தென் தமிழகம் முழுமைக்கும் மிக கனமழை முதல் கனமழை வரைக்கு வாய்ப்பு இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளது.
சென்னையில் இரவில் கனமழை பெய்தது. இடியுடன் கூடிய கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கியது. கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
No comments:
Post a Comment